மின்சார கட்டண நிலுவை செலுத்தாதோருக்கு எச்சரிக்கை!

Date:

மின்சார கட்டணத்தை செலுத்தாத பாவணையாளர்களுக்கு அதற்கான மேலதிக கட்டணத்தை அறவிடுதல் அல்லது அவர்களுக்கான மின்விநியோகத்தை துண்டிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் மூன்று மாத காலத்திற்குள் மின்சாரக் கட்டண நிலுவைகைளை செலுத்த தவறுவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காலத்திற்குள் கட்டணங்களை செலுத்த தவறினால் அவ்வாறானோரிடமிருந்து கூடுதல் தொகை அறவீடு செய்யுமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இலங்கையில் மின்சார பயனர்களினால், சுமார் ஐயாயிரம் கோடி ரூபா கட்டண நிலுவை செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மின்சார சபைக்கு 4400 கோடி ரூபாவும், இலங்கை மின்சார தனியார் நிறுவனத்திற்கு 600 கோடி ரூபாவும் கட்டண நிலுவை செலுத்தப்பட உள்ளதாகவும் மாதாந்த மின் கட்டணத்தை 30 நாட்களுக்குள் அறவீடு செய்து கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...