இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு வேலைத்திட்டங்கள் !

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களின் 2021 ஆம் ஆண்டின் பாராளுமன்ற உறுப்பினருக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருபத்தி நான்கு இலட்சம் ரூபா(24,00000.00) செலவில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம்,
மட்டக்களப்பு மாவட்டம், மாச்சந்தொடுவாய் மகப்பேறு நிலையத்தில் தாய்மார்களுக்கு வசதியளிப்பதற்கான இடம் தயாரிப்பு,புதிய காத்தான்குடி ஜனாஸா நலன்புரி சங்கத்திற்கு சேவை உபகரணங்கள் வழங்கி வைப்பு,
ஆரையம்பதி ஒல்லிக்குளம் மயானத்தின் சுவர் நிர்மாணம் நிறைவு செய்தலுக்காக ஒரு தொகை நிதி ஒதுக்கீடு,ஏறாவூர் ரஹ்மானியா கல்லூரி விளையாட்டு வளாகம் நிறைவு செய்தல், காத்தான்குடி அஸ் சுஹதா கல்லூரிக்கு டொஷிபா புகைப்பட நகல் இயந்திர நன்கொடை,காத்தான்குடி பத்ரியா வித்தியாலயத்திற்கு டொஷிபா ரக புகைப்பட நகல் இயந்திர நன்கொடை,
காத்தான்குடி அஸ் ஸஹ்ரா கல்வி நிறுவனத்திற்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைப்பு,காத்தான்குடியில் உள்ள IWARE மகளிர் சுயகற்றல் நிலையத்திற்கு தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள் நன்கொடை வழங்கி வைப்பு,காத்தான்குடி முத்தினார் லேன் வீதி இன்டர்லாக் இட்டு நிர்மானம்,பரிசாரியார் லேன் வீதி மஸ்ஜிதுன் நூர் லேனின் இன்டர்லாக் இட்டு நிர்மானம்,
போன்ற செயற் திட்டங்கள் முன்னைடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலான மற்றும் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் ஆகியோரின் வேண்டுகோளின் பிரகாரமே குறித்த நிதிகள் ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...