உக்ரைன்-ரஷ்யா போர் Updates;சர்வதேச சந்தையில் ரஷ்யாவின் செயல்பாடுகளைத் தடுப்போம்-பைடன் அதிரடி!

Date:

ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சர்வதேச சந்தையில் ரஷ்யாவின் செயல்பாடுகளைத் தடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த பையன்,போரை ரஷ்யா தான் முதலில் ஆரம்பித்ததாகவும் அதற்கான விளைவுகளை புடின் சந்தித்தே தீர வேண்டும் என்றார்.

உக்ரைனுக்கு ஆதரவாக படைகளை அனுப்பப் போவதில்லை என்றும் அதேநேரம் நேட்டோ நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்றார். சைபர் தாக்குதல் நடத்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என்றார்.

உக்ரைன், ரஷ்யா விவகாரத்தில் இந்தியா யார் பக்கம் இருக்கிறது என கலந்தாலோசித்து வருவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகள் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பைடன் தெரிவித்துள்ளார். ரஷ்ய தொழில் நிறுவனங்கள் நான்கு முக்கிய வங்கிகளின் சொத்துக்கள் முடக்கப்படுவதாக பைடன் கூறியுள்ளார். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...