பெட்ரோலிய களஞ்சியப் பிரிவின் தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நியமனம்!

Date:

இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலை பிரிவின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற ஜெனரல் எம்.ஆர். டபிள்யூ.டி. சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் தலைவர் நாலக பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யூ. டி சொய்சா, காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னைய தலைவராக இருந்தார்.

இதேவேளை, நீடித்து வரும் எரிபொருள் நெருக்கடி நாளையுடன் முடிவுக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே நம்புகின்றார்.

தற்போது இரண்டு கப்பல்களில் இருந்து மொத்தம் 65,000 மெட்ரிக் தொன் எரிபொருள் இறக்கப்பட்டுள்ளது, மற்றுமொரு எண்ணெய் தாங்கி இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...