தற்காலிக பொருளாதார நெருக்கடிகளில் இருந்து விரைவில் இலங்கை மீளும் என நம்பப்படுவதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
நேற்றையதினம்,இடம்பெற்ற சீன வெளிவிவகார அமைச்சின் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.
‘இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் முயற்சிகள் மற்றும் ஒற்றுமையுடன், நாடு தற்காலிக சிரமங்களை விரைவில் சமாளித்து இன்னும் பெரிய வளர்ச்சியைத் தழுவும் என்று நம்பப்படுகிறது’ என்று தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
மேலும், இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததிலிருந்து, சீனாவும் இலங்கையும் பரஸ்பர புரிந்துணர்வை வெளிப்படுத்தி, பரஸ்பர ஆதரவை வழங்கி வருகின்றன.
இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா தனது திறனை அனுமதிக்கும் வகையில் உதவிகளை வழங்கி வருவதாகவும், தொடர்ந்தும் அதனைச் செய்யும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.