‘இலங்கை, தற்காலிக நெருக்கடிகளை விரைவில் தீர்க்கும்’: சீனா நம்பிக்கை

Date:

தற்காலிக பொருளாதார நெருக்கடிகளில் இருந்து விரைவில் இலங்கை மீளும் என நம்பப்படுவதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

நேற்றையதினம்,இடம்பெற்ற சீன வெளிவிவகார அமைச்சின் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

‘இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் முயற்சிகள் மற்றும் ஒற்றுமையுடன், நாடு தற்காலிக சிரமங்களை விரைவில் சமாளித்து இன்னும் பெரிய வளர்ச்சியைத் தழுவும் என்று நம்பப்படுகிறது’ என்று தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

மேலும், இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததிலிருந்து, சீனாவும் இலங்கையும் பரஸ்பர புரிந்துணர்வை வெளிப்படுத்தி, பரஸ்பர ஆதரவை வழங்கி வருகின்றன.

இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா தனது திறனை அனுமதிக்கும் வகையில் உதவிகளை வழங்கி வருவதாகவும், தொடர்ந்தும் அதனைச் செய்யும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

5 ஆவது மீளாய்வு குறித்து இலங்கையுடன் IMF பணியாளர் மட்ட ஒப்பந்தம்!

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களும் இலங்கை அதிகாரிகளும் 4 ஆண்டு நீட்டிக்கப்பட்ட...

இஸ்ரேல் – ஹமாஸ் முதற்கட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டது: பணயக் கைதிகள் விடுவிப்பிற்கு ஹமாஸ் இணக்கம்!

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான முதற்கட்ட போர்...

கட்டுரை: ஹமாஸின் சாணக்கியம்: முஸ்லிம்கள் தெரிய வேண்டியது என்ன?

அஹ்மத் அல்-ரஷீத் அல்ஜஸீராவிலிருந்து.. அரசியல் என்பது சாத்தியங்களின் கலை, கனவுகளின் கலை அல்ல என்று...

சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்தம் செய்யப்பட்ட முடிவுகள் வெளியீடு!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின்...