சீனாவில், மலையில் விழுந்து நொறுங்கிய விமானம் :பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

Date:

சீனாவில் 133 பேருடன் சென்ற ‘சீனா ஈஸ்டர்ன்’ என்ற எயார்லைன்ஸிற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியாகியுள்ளன.

குன்மிங் நகரிலிருந்து குவாங்சோவுக்கு பறந்து கொண்டிருந்தபோது குவாங்சி மாகாணத்தில் உள்ள மலையில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானது என சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து நடந்த இடத்திற்கு அருகில் மீட்புக் குழுக்கள் அனுப்பட்டுள்ள போதும் உயிரிழப்புகள் மற்றும் சேதம் குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

குறித்த விமானம், புறப்பட்டு சென்றபின் உரிய நேரத்துக்குள் குவாங்ஜு நகருக்கு விமானம் சென்று சேரவில்லை.இதையடுத்து, நடத்தப்பட்ட தேடுதலில் மலைப்பகுதியில் விமானம் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது

இந்த விபத்தையடுத்து சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்றுள்ளனர்.

விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலைமை தொடர்பில் என்ன ஆனது? என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

அதேநேரம், குவாங்சி பகுதியில் விமானம் மோதியதால் அங்குள்ள மலைப் பகுதியில் பாரியளவில் தீ ஏற்பட்டுள்ளது.

Popular

More like this
Related

டெங்கு பரவலால் கொழும்பு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் Online-இல்!

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நிலவும் டெங்கு பரவல் காரணமாக, அனைத்து கல்வி நடவடிக்கைகளையும்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...

பேஸ்புக்கில் AI மூலம் இயங்கும் போலி பெண் கணக்குகள்!

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட...

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை எட்டியது!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 63,835 டெங்கு நோய்த் தொற்றாளர்கள் அடையாளம்...