இந்திய வெளிவிவகார அமைச்சர்: இலங்கை வருகை!

Date:

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அடுத்த வாரம் இரண்டு நாட்கள் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வரவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், டாக்டர் ஜெய்சங்கர் மார்ச் 28 முதல் 30 வரை இங்கு இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிக்கையின்படி, டாக்டர் ஜெய்சங்கர் இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய இரு தீவு நாடுகளின் நண்பர்களான அப்துல்லா ஷாஹித் மற்றும் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் ஆகியோரின் அழைப்பின் பேரில் மார்ச் 26 முதல் 30 வரை இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கு விஜயம் செய்கிறார்.

இந்த விஜயத்தின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...