பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போதைக்கு எரிபொருள் விலையை அதிகரிக்க விரும்பவில்லை: எரிசக்தி அமைச்சர்

Date:

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இதன்படி, அந்நிறுவனம் விற்பனை செய்யும் 92 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 303 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு , இந்த ஆண்டு மட்டும் நான்கு முறை விலையை உயர்த்தியுள்ளது .

இதற்கிடையில், சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ந்து மக்கள் வரிசையில் நிற்கும் நிலை தொடர்கின்றது . இதேவேளை ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே விளக்கமளிக்கையில்,

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகள் தற்போதைய நிலையில் அதிகரிக்கப்படாது என தெரிவித்துள்ளார் .

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இதன்படி, அந்நிறுவனம் விற்பனை செய்யும் 92 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 303 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு , இந்த ஆண்டு மட்டும் நான்கு முறை விலையை உயர்த்தியுள்ளது .

இதற்கிடையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ந்து மக்கள் வரிசையில் நிற்கும் நிலை தொடர்வதுடன் ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே விளக்கமளிக்கையில்,

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) தற்போதைக்கு எரிபொருள் விலையை அதிகரிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள இந்திய எண்ணெயின் துணை நிறுவனமான லங்கா ஐ.ஓ.சி, இந்த ஆண்டில் மட்டும் நான்காவது முறையாக அனைத்து வகை பெற்றோல்களின் விலையை உயர்த்தியதையடுத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் டொலர் நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வினால் ஏற்பட்ட தேவையற்ற நிலைமைகள் காரணமாக பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி தெரிவித்துள்ளதுடன்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...