சர்வதேச நாணய நிதியத்தை கையாள்வதற்காக விசேட குழு நியமனம்!

Date:

சர்வதேச நாணய நிதியத்தை (IMF) கையாள்வதற்காக சர்வதேச சட்ட நிறுவனம் ஒன்றை தெரிவு செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த குழுவில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆர்ட்டிகல ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சர்வதேச நாணய நிதியத்துடன் உடன் கலந்துரையாடுவதற்காக ஏப்ரல் நடுப்பகுதியில் வொஷிங்டனுக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...