சர்வதேச நாணய நிதியத்தை கையாள்வதற்காக விசேட குழு நியமனம்!

Date:

சர்வதேச நாணய நிதியத்தை (IMF) கையாள்வதற்காக சர்வதேச சட்ட நிறுவனம் ஒன்றை தெரிவு செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த குழுவில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆர்ட்டிகல ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சர்வதேச நாணய நிதியத்துடன் உடன் கலந்துரையாடுவதற்காக ஏப்ரல் நடுப்பகுதியில் வொஷிங்டனுக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

கொழும்பில் நாளை இடம்பெறவுள்ள ‘அல் அகீதா அஸ் – ஸஹீஹா’ நூல் வெளியீட்டு மாநாடு!

இலங்கையிலுள்ள பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவரான அல்-ஆலிம் சி.ஐ.எம். அஸ்மீர்...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து...

இன்று நடைபெறுகின்ற புத்தளம் பெரிய பள்ளிவாசல் தர்ம கர்த்தா சபை நியமனம் தொடர்பில் முறைப்பாடு

(குறிப்பு: புத்தளம் பெரிய பள்ளிவாசலுடைய நிர்வாக சபை தெரிவு இன்று மாலையில்...

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்: பொலிஸார் எச்சரிக்கை!

அதிவேகம் மற்றும் கவனயீனமாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து...