2022 ஆம் ஆண்டுக்கான உலக ஸ்னூக்கர் போட்டியில், இலங்கையின் மொஹமட் இர்ஷாத்

Date:

தேசிய ஸ்னூக்கர் சம்பியனான மொஹமட் தாஹா இர்ஷாத் அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான உலக ஸ்னூக்கர் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பினை இலங்கையில் இருந்து பெற்றிருக்கார்.

இந்த ஆண்டின் ஜுலை மாதம் 7 ஆம் திகதி தொடக்கம், 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த ஸ்னூக்கர் விளையாட்டுப்போட்டிகளில் ஆடும் வாய்ப்பினை இர்ஷாத் தாஹா கட்டாரில் ஒழுங்கு செய்யப்பட்ட (Billiard) உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் தொடரில் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டத்தின் மூலம் பெற்றிருந்தார்.

கனிஷ்ட சிரேஷ்ட பிரிவுகளில் இலங்கையின் ஸ்னூக்கர் மற்றும் பில்லியார்ட் சம்பியனாக காணப்படுகின்ற இர்ஷாத் கட்டாரில் நடைபெற்றிருந்த 21 வயதின் கீழ்ப்பட்ட போட்டியாளர்களான உலக ஸ்னூக்கர் சம்பியன்ஷிப் தொடரிலும் அடுத்தடுத்த வெற்றிகளுடன் இலங்கையின் நாமத்தினை உலகறியச் செய்திருந்தார்.

இதேவேளை இலங்கை, தாய்லாந்து, ஈரான் இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சிரியா, ஜேர்மனி மற்றும் கட்டார் போன்ற முன்னணி நாடுகுளின் 18 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...