பலஸ்தீனின் ‘பூமி’ தினத்தை முன்னிட்டு கொழும்பில் கண்காட்சி!

Date:

பலஸ்தீனின் ‘பூமி’ தினத்தை முன்னிட்டு இடம்பெறுகின்ற கண்காட்சி நிகழ்விற்கான ஆரம்ப நிகழ்வு இன்று பலஸ்தீனின் தூதரகத்தில் இடம்பெற்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, சுரேன் ராகவன் மற்றும் பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச். செய்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை 29,30,31 ஆகிய தினங்களில் பலஸ்தீன்- இலங்கைக்கு இடையிலே உள்ள நல்லுறவு தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

1948ஆம் ஆண்டு ஒரு தேசம் இரண்டு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் ஒரு பிரதேசம் பிரிக்கப்பட்ட தினம் முதலே தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது.

மற்றொரு பிரதேசம் போராடி தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. இதில் அங்கீகரிக்கப்பட்ட நாடு இஸ்ரேல். மற்றொன்று பாலஸ்தீனம்.

மற்றொரு பிரதேசமான பாலஸ்தீனம் இன்று வரையில் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதியாகத்தான் குறிப்பிடப்பட்டுவருகிறது. 2012-ம் ஆண்டுதான் பாலஸ்தீனம் ஐ.நா-வில் ‘ஒப்சர்வர் ஸ்டேட்’ என்கிற அந்தஸ்தைப் பெற்றது.

இங்கு 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக இஸ்லாமிய மக்களே வாழ்ந்துவருகின்றனர். மேற்குக் கரை,காஸா என பாலஸ்தீனம் இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...