போதைப்பொருள் கடத்தல்காரரான ‘கிம்புலா’ எலே குணாவின் பிரதான உதவியாளர் கைது!

Date:

பல  குற்றங்கள் தொடர்பாக இந்தியாவில் உள்ள சிறையில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரான கிம்புலா எலே குணாவின் பிரதான உதவியாளர் மற்றும் தோழருமான ஒருவரை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (28) பிற்பகல் புளூமெண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரெடிபானா எல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பல்வேறு போதைப் பொருட்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சந்தேகநபரிடம் 13 கிராம் ஹெரோயின், 01 கிராம் ஐஸ், 22 கிராம் கேரள கஞ்சா மற்றும் 160 “PREGA TABLETS” எனும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேகநபரிடம் இருந்து போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 150,200 ரூபா பணம் மற்றும் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் கொழும்பு 15, அளுத் மாவத்தையில் வசிக்கும் 27 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக புளூமெண்டல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...