அலரி மாளிகையில் தற்சமயம் முக்கிய கலந்துரையாடல்!

Date:

நாட்டில் இடம்பெறும் பாரிய பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் தற்போது மிக முக்கியமான கலந்துரையாடல் ஒன்று அலரி மாளிகையில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச தவிர்ந்த ஏனைய அனைத்து ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் முக்கியமான தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக அறிய முடிகின்றது.

தற்போது நடைபெற்று வரும் கலந்துரையாடலின் பின்னர் முக்கிய தீர்மானங்கள் பல எடுக்கப்படலாம் எனவும் மாற்றங்கள் பல நேரலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு திடீரென கூட்டப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் ஆளும் கட்சியின் பெரும்பான்மையானோர் பங்கேற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவைக் கூட்டத்தில் அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பலம் வாய்ந்த அமைச்சர்கள் ஓரிருவர் தமது பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக பிரதமர் தனது பதவி தொடர்பில் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் பதவி விலகினால் அமைச்சரவை கலைக்கப்பட்டு காபந்து அரசாங்கம் நியமிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய பிரதமராக டலஸ் அழகப்பெரும, ரணில் விக்கிரமசிங்க மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோரும் புதிய காபந்து அரசாங்கத்தின் நிதி அமைச்சராக ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...