நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இராஜினாமா!

Date:

திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று கையளித்ததாக ஆட்டிகல உறுதிப்படுத்தினார்.

திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளராக ஆட்டிகல 2019 நவம்பர் 19 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டார்.

பல அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

நான்கு பேர் கொண்ட தற்காலிக அமைச்சரவையின் கீழ் நிதி அமைச்சராக நேற்று நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியும் தனது இலாகாவிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.

இலங்கையின், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்குக் காரணமான ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்களின் தொடர்ச்சியான எதிர்ப்புக்கள் போராட்டங்கள் காரணமாக பல உயர்மட்ட அரச அதிகாரிகள் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு பிணையில் செல்ல அனுமதி

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தலங்கம பொலிசாரினால் இன்று...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள்

எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு...

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இலவச விசா !

குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா...

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பு: நாடு முழுவதும் 18 புதிய கோல்போஸ்கோபி இயந்திரங்கள் வழங்கிவைப்பு!

இலங்கையில் ஐந்தாவது பொதுவான புற்றுநோயான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்கும், அது...