இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்!

Date:

பாராளுமன்றத்தில் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதற்காக இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை சபையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி ஆகியோர் கட்டுக்கடங்காத வகையில் நடந்து கொண்டதையடுத்து அவர்களை பாராளுமன்ற அறையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் பணித்தார்.

அதன் பிரகாரம், அவர்களை அப்புறப்படுத்த சார்ஜன்ட் நடவடிக்கை எடுத்தார்.

இரு எம்.பி.க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் அநாகரீகமாக நடந்து கொண்டனர்.

அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை வெளியேற்றுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பணிப்புரை விடுத்தார்

அதேவேளை இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளியேறும்வரை சபாநாயகர் சபைக்கு வரமாட்டார் எனவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...