ஜனாதிபதியை சந்திக்க, சுயேட்சையாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் குழு மறுப்பு!

Date:

(File Photo)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று இரவு நடைபெறவிருக்கும் கலந்துரையாடலை புறக்கணிக்க அரசாங்கத்தில் இருந்து விலகிய சுயேட்சையாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.

சுயேட்சைக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் சாந்த பண்டாரவை அரசாங்கத்திற்கு மாற்றியமைத்ததற்கும் இராஜாங்க அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து சுயேட்சைக் குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இன்றைய கலந்துரையாடலை புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் சுயாதீன பாராளுமன்றக் குழுவின் பிரதிநிதிகளுக்கு இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று இரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபச்சவுக்கும் அரசிலிருந்து வெளியேறி சுயாதீனமாகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலைப் புறக்கணிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள் குழு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஜனாதிபதி – IMF பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான...

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை மீள ஒப்படைக்க முடியும்: அமைச்சர் ஆனந்த விஜேபால

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் ஒப்படைக்க முடியும்...

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது!

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70...

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு 8000 முறைப்பாடுகள்

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு...