பதவி விலகிய அமைச்சரவை அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) மாலை 05.00 மணிக்கு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 18 ஆம் திகதி புதிய அமைச்சரவை நியமியக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்ற நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதுடன் தீர்க்கமான முடிவுகள் எட்டப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, சர்வதேச நாணய நிதித்துடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தல் என்பன தொடர்பில், இதன்போது முக்கியமாக கலந்துரையாடப்படவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், ஆளுந்தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளனர்.