ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, பாராளுமன்றம் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது!

Date:

எதிர்க்கட்சித் தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாடாளுமன்றம் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியது.

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 3 வருடங்கள் கடந்துள்ளள நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோளுக்கு இணங்க உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சரி செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டம் இன்று (21) 1.30 மணிக்கு இடம்பெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தை ஆரம்பித்த போது அறிவித்தார்.

அனைத்துக் கட்சித் தலைவர்களும் நாடாளுமன்ற விவகாரக் குழுவின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் சபாநாயகர் கூறினார்.

Popular

More like this
Related

சலாம் ரமழான் 2026: கொழும்பு கிரீன் பாத்தில் தொடங்கிய கலாசார விழா!

இலங்கையின்  முஸ்லிம் கலாசாரத் திருவிழாவான ‘சலாம் ரமழான் 2026’, மேல் மாகாண...

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...