சுயேட்சை எம்.பிக்கள் குழு, 21ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சமர்ப்பித்தது!

Date:

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பான மற்றுமொரு பிரேரணை இன்று பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ இந்த பிரேரணையை தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலமாக பாராளுமன்ற சபாநாயகரிடம் கையளித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சுயேட்சையான பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவினால் இந்த பிரேரணை கூட்டாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் தேசிய நெருக்கடி குறித்து அண்மையில் பாராளுமன்றத்தில் சுயேட்சையாக மாறிய ஆளும் கட்சியைச் சேர்ந்த 40 எம்.பி.க்கள் சார்பில் அவர் இந்த பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.

21ஆவது திருத்தம் தொடர்பான சுயேட்சைக் குழுவின் பிரேரணையில் 20வது திருத்தம் நீக்கப்பட வேண்டும் என்றும் 19வது திருத்தத்தை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கோருகிறது.

அரசியலமைப்பின் உத்தேச 21ஆவது திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இரண்டாவது பிரேரணை இதுவாகும்.

இதேவேளை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் 21ஆவது திருத்தம் தொடர்பான யோசனையை நேற்று சபாநாயகரிடம் கையளித்தது.

இந்த யோசனை அந்தக்கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குதல் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் மற்றும் ஏனைய முக்கிய சீர்திருத்தங்களுக்கு உட்பட்டது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...