‘அரசாங்கம் பொருளாதார பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதை பாராளுமன்றத்தில் கூறவும்’: சஜித்

Date:

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறையை முன்வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போதும், சர்வதேச நாணய நிதியத்துடனான தனது கலந்துரையாடல்களின் முன்னேற்றத்தையும் அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்று கூறிய சஜித், அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதிலும், அதற்கான முன்மொழிவை ஏன் முன்வைக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், டொலர் தட்டுப்பாடு என்று இந்த நாடு இப்போது நிலங்களை விற்கப் போகிறது. இதுதான் அரசாங்கத்தின் தீர்வுத்திட்டா? இந்த அரசாங்கத்திடம் இன்று வரைபடம் ஒரு எதிர்காலத்திட்டம்இல்லை.

அரசாங்க எம்.பி.க்கள் குழு ஜனாதிபதி பதவி விலக வேண்டும். மற்றொரு குழு பிரதமர் பதவி விலக வேண்டும். இதுதானா அரசாங்கத்தின் வழிகாட்டல் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...