‘அரசாங்கம் பொருளாதார பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதை பாராளுமன்றத்தில் கூறவும்’: சஜித்

Date:

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறையை முன்வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போதும், சர்வதேச நாணய நிதியத்துடனான தனது கலந்துரையாடல்களின் முன்னேற்றத்தையும் அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்று கூறிய சஜித், அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதிலும், அதற்கான முன்மொழிவை ஏன் முன்வைக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், டொலர் தட்டுப்பாடு என்று இந்த நாடு இப்போது நிலங்களை விற்கப் போகிறது. இதுதான் அரசாங்கத்தின் தீர்வுத்திட்டா? இந்த அரசாங்கத்திடம் இன்று வரைபடம் ஒரு எதிர்காலத்திட்டம்இல்லை.

அரசாங்க எம்.பி.க்கள் குழு ஜனாதிபதி பதவி விலக வேண்டும். மற்றொரு குழு பிரதமர் பதவி விலக வேண்டும். இதுதானா அரசாங்கத்தின் வழிகாட்டல் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...