இந்தியா, இந்தோனேசியாவிடமிருந்து இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள்!

Date:

இந்திய அரசினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் எதிர்வரும் புதன்கிழமை இலங்கை வந்தடையும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் இந்திய கடற்படைக்கு சொந்தமான காரியல் கப்பல் மூலம் இலங்கை வந்தடையும் என்று அவர் கூறினார்.

இதேவேளை, இலங்கைக்கு நன்கொடையாக ஒரு வாரத்திற்குள் இந்தோனேசிய அரசாங்கத்திடமிருந்து 340 மில்லியன் ரூபாள் மதிப்புள்ள அத்தியாவசிய மருந்துகள், கிடைக்கபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாட்டில் இருந்து மேலும் நன்கொடைகளை எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

போதைப்பொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாகவும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் இதற்கான உதவிகளை செய்து வருவதாகவும் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...