சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் சீன தூதுவரை அவசரமாக சந்திப்பு!

Date:

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கொழும்பிலுள்ள சீன தூதுவர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். சுயாதீனமாக செயற்படும் 7 உறுப்பினர்களை அவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து இதன்போது கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவிக்கின்றது.

இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்குமாறு சுயாதீன உறுப்பினர்கள் சீன தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரெலிய ரத்தன தேரர், வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, தயாசிறி ஜயசேகர, அநுர பிரியதர்ஷன யாப்பா, வீரசுமன வீரசிங்க மற்றும் ஜகத் புஸ்பகுமார ஆகியோரே இவ்வாறு சீன தூதுவரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...