கொழும்பில் மண்ணெண்ணய்க்கான கேள்வி அதிகரிப்பு: நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

Date:

சமையல் எரிவாயு விலையேற்றத்தை அடுத்து மண்ணெண்ணய்க்கான கேள்வி மேலும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக கொழும்பு நகர் பகுதிகளுக்குள் வாழும் மக்களுக்கு வேறு தெரிவே கிடையாது என்பதால் காலை முதல் மாலை வரை மக்கள் மண்ணெண்ய்க்காக வரிசையில் நின்று கொண்டு காத்திருக்கிறார்கள்.

அவர்களின் வாழ்விட அமைவு சூழலில் விறகு பாவனை பற்றி எல்லாம் எண்ணிக் கூட பார்க்க முடியாது. இன்று முற்பகல் 11.30 அளவில் கொழும்பு கிறேண்ட்பாஸ் பகுதியில்மக்கள் நீண்ட வரிசையில் இருந்த காட்சியே இது.

மக்கள் இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு. அது எப்போது அமுலுக்கு வரும் என்று ஒரு வார காலமாக பாராளுமன்றம் கூடியும் காத்திரமான எந்த முடிவும் இல்லை. கதிரைகளை கணக்குப் போடும் விளையாட்டு தான் நடந்தது. தொடர்ந்தும் நடக்கின்றது.

இந்தக் கதிரைகள் ஏல விற்பனையில் விற்பனையாகி சிலர் பதவிகளைப் பெற்றுக் கொண்ட கேவலத்தை தவிர, பொது மக்களுக்கு எந்த நன்மையும் கிட்டவில்லை.

 

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...