கொழும்பில் மண்ணெண்ணய்க்கான கேள்வி அதிகரிப்பு: நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

Date:

சமையல் எரிவாயு விலையேற்றத்தை அடுத்து மண்ணெண்ணய்க்கான கேள்வி மேலும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக கொழும்பு நகர் பகுதிகளுக்குள் வாழும் மக்களுக்கு வேறு தெரிவே கிடையாது என்பதால் காலை முதல் மாலை வரை மக்கள் மண்ணெண்ய்க்காக வரிசையில் நின்று கொண்டு காத்திருக்கிறார்கள்.

அவர்களின் வாழ்விட அமைவு சூழலில் விறகு பாவனை பற்றி எல்லாம் எண்ணிக் கூட பார்க்க முடியாது. இன்று முற்பகல் 11.30 அளவில் கொழும்பு கிறேண்ட்பாஸ் பகுதியில்மக்கள் நீண்ட வரிசையில் இருந்த காட்சியே இது.

மக்கள் இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு. அது எப்போது அமுலுக்கு வரும் என்று ஒரு வார காலமாக பாராளுமன்றம் கூடியும் காத்திரமான எந்த முடிவும் இல்லை. கதிரைகளை கணக்குப் போடும் விளையாட்டு தான் நடந்தது. தொடர்ந்தும் நடக்கின்றது.

இந்தக் கதிரைகள் ஏல விற்பனையில் விற்பனையாகி சிலர் பதவிகளைப் பெற்றுக் கொண்ட கேவலத்தை தவிர, பொது மக்களுக்கு எந்த நன்மையும் கிட்டவில்லை.

 

Popular

More like this
Related

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...