இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து சுயேட்சை எம்.பி.க்கள் இந்திய தூதுவருடன் கலந்துரையாடல்!

Date:

அண்மையில் அரசாங்கத்தைவிட்டு வெளியேறிய தயாசிறி ஜயசேகர, உதய கம்மன்பில, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை சந்தித்துள்ளது.

இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தனது நாட்டின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்தியத் தூதுவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை மக்களுடன் இணைந்து நிற்பதற்காக இந்திய மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியத் தூதுவர் மற்றும் சுயேட்சை எம்.பி.க்கள் இலங்கையின்; தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை குறித்து தங்கள் எதிர்கால முன்னோக்கைப் பகிர்ந்து கொண்டனர்.

Popular

More like this
Related

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...