‘அரசியலமைப்பு திருத்தம் தற்போது பிரச்சினைக்கு தீர்வாகாது’:வஜிர அபேவர்தன

Date:

நாட்டு மக்கள் இப்போது அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நீக்கி 21 ஆவது திருத்தத்தை ரத்து செய்ய விரும்பவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தோடு எரிபொருள், எரிவாயு, மின்சாரம், மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை மீளப் பெற்று இயல்பு வாழ்க்கையைத் தொடரவே விரும்புகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் எடுக்கும் தவறான முடிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான பிரச்சினைகளை கண்டறிந்து துரிதமாக தீர்க்க வேண்டும் எனவும், இல்லையேல் நாடு பேரழிவிற்குள்ளாகும் எனவும் அபேவர்தன தெரிவித்தார்.

நாட்டுக்கு அவசர பொருளாதார தீர்வொன்று தேவைப்படுவதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஏற்கனவே அந்த தீர்வுகளை பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கை – பெலாரஸ் இடையே சுகாதாரத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கு இடையே சுகாதார சேவை தொடர்பான புரிந்துணர்வு...

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...