ஜனநாயக ரீதியாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருவோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது!

Date:

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை தொடர்பாக தமது எதிர்ப்பை முன்வைத்து ஜனநாயக ரீதியில் காலி முகத்திடலிலும் அலரி மாளிகைக்கு முன்னிலும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டவர்கள் மீது இன்று தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமையானது மிகவும் கவலையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயகத்திற்கு எதிரான இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இத்தாக்குதல் தொடர்பில் நியாயமான மற்றும் வெளிப்படையான ஒரு விசாரணை நடாத்தப்பட்டு, இதனை மேற்கொண்டவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டுமென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் சகல தரப்பினரும் வன்முறையை தவிர்ந்து அமைதியான முறையில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

அஷ்-ஷைக் எம். எஸ். எம். தாஸீம்,
பதில் பொதுச் செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...