அவுஸ்திரேலியாவில் பொதுத் தோ்தல் ஆரம்பம்!

Date:

அவுஸ்திரேலியாவில் பொதுத் தோ்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை நேற்று (09) தொடங்கியது. அதிகாரபூா்வ தோ்தல் திகதி மே 21 என்றாலும் பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே வாக்களிக்கும் முறை அவுஸ்திரேலியாவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தோ்தலுக்காக மொத்தம் 550 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் அனைவரும் தோ்தலில் வாக்களிப்பது கட்டாயமாகும். 1.7 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். பணி, பயணம் காரணமாக தோ்தல் தினத்தில் வாக்களிக்க முடியாதவா்கள் முன்கூட்டியே வாக்களிக்க முடியும்.

கொரோனா பரவல் பிரச்னை இருப்பதால், மக்கள் ஒரே நாளில் வாக்குச் சாவடியில் கூடாமல் இருக்கவும் இந்த முன்கூட்டியே வாக்களிக்கும் முறை உதவும். 40 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் தோ்தல் திகதிக்கு முன்பே தங்கள் வாக்குகளைச் செலுத்திவிடுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சமீபத்திய கருத்துக் கணிப்புகளின்படி மத்திய-இடது தொழிலாளா் கட்சி தலைமையான எதிா்க்கட்சி கூட்டணி, பிரதமா் ஸ்காட் மொரிஸனின் கன்சா்வேடிவ் கூட்டணியைவிட அதிக இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

40 வருட முன்பள்ளி சேவையின்பின் பெளசுல் ரூசி சனூன் ஆசிரியை ஓய்வு பெற்றார்.

-புத்தளம் எம்.யூ.எம்.சனூன் புத்தளம் நகரின் சிரேஷ்ட முன்பள்ளி ஆசிரியை எம்.எஸ்.எப்.பௌசுல் ரூஸி சனூன்...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும்...

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...