வன்முறை சம்பவங்கள் பற்றிய தகவல்களை அறிவிக்குமாறு மக்களிடம் சி.ஐ.டி வேண்டுகோள்!

Date:

அண்மையில் அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளான, காயமடைந்த மற்றும் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கமைய 0112 422176, 0112 320145, 0718592087, 0718594942, 0718594901 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரியுள்ளனர்.

அதேபோல வன்முறைக் குழுக்களின் குற்றச் செயல்கள் மற்றும் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், கொள்ளையடித்தல் மற்றும் தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுமக்கள் பின்வரும் தொடர்பு எண்கள் மூலம் அத்தகைய தகவல்களை வழங்க முடியும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் அவசர தொலைபேசி எண் – 0767 392 977 மற்றும் 0112 441 146, பொது பாதுகாப்பு அமைச்சகம் – 118.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...