ஏறாவூர் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய 12 சந்தேக நபர்கள் கைது!

Date:

நாட்டில் ஏற்படுத்தப்பட்ட வன்முறை மற்றும் வன்முறையுடன் இடம்பெற்ற பொருட்கள் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர் .

கிழக்குமாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபரின் கட்டளையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலின் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி எஸ் .பி .பண்டார தலைமையிலான மூன்று பொலிஸ் குழுவினர் இணைந்து மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் நடாத்தப்பட்ட வன்முறை மற்றும் பொருட்கள் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் நடாத்தப்பட்ட வன்முறையின் போது பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டமை மற்றும் பொருட்கள் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையின் கீழ் பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ள பதிவுகள் மூலம் பொதுமக்கள் தகவல்களை மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவுக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...