டீசல் தட்டுப்பாடு காரணமாக 50 சதவீத தனியார் பேருந்துகள் இன்றும் இயங்குகின்றன!

Date:

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று 50 வீதமான தனியார் பஸ்களை இயக்க முடியும் என தனியார் பஸ் நடத்துனர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், சில தூர பிரதேசங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பெற்றோல் நிலையங்களில் டீசல் விநியோகம் செய்வதில் பஸ்களுக்கு முன்னுரிமை வழங்கினால் பஸ் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஊரடங்குச் சட்டம் காரணமாக நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனைய ரயில்கள் வழமை போன்று இயங்கும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று முதல் வழமை போன்று பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கத்தின் தலைவர் எல்.மல்ஸ்ரீP டி சில்வா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...