மே 9, கலவரம் தொடர்பில் டான் பிரியசாத் கைது செய்யப்பட்டார்!

Date:

காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி அலரிமாளிகை தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் டான் பிரியசாத்தை கைது செய்துள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளன.

கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க மற்றும் சனத் நிஷாந்த ஆகியோர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் டான் பிரியசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோ, சீதாவக்க பிரதேச சபையின் தலைவர் ஜயந்த ரோஹன மற்றும் களனி பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுள பிரசன்ன ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...