ஹோட்டல் தங்குமிடங்களை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை !

Date:

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக ஹோட்டல் தங்குமிடங்களை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து வெளியில் சென்றுள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வீடு திரும்ப விரும்பியதாகவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அதனைச் செய்ய முடியாமல் போனதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

“எனவே, அவர்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்காக கொழும்பில் தங்குவதற்கு ஹோட்டல் ஒன்றை முன்பதிவு செய்யுமாறு என்னிடம் கோரியுள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதில் உள்ள சிரமங்களை ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே சமூக ஊடகங்கள் ஊடாக குரல் கொடுத்து வருகின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படுவது தொடர்பான அறிக்கைகள் இன்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட நிலையில் சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...