அம்பாறையில் ஆளும்கட்சி எம்.பிகளின் வீடுகளை தீயிட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 11 பேர் கைது!

Date:

அம்பாறையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் நகரசபை முதல்வர் உட்பட அவர்களது உறவினர்களது வீடுகளை தீக்கிரையாக்கி மற்றும் சேதமாக்கிய சம்பவம் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை (19) 4 பேரை மேலும் கைது செய்ததுடன் இதுவரை 11 பேரை கைது செய்துள்ளதாக அம்பாறை தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

நாட்டில் ஏற்பட்ட மே 9 திகதி வன்முறை சம்பவத்தையடுத்து அம்பாறையிலுள்ள ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான வீரசிங்க, விமல திஸாநாயக்கா மற்றும் அவரது மகனின் வீடு , அம்பறை நகரசபை முதல்வர் ஆகியோரது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து இச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கடந்த திங்கட்கிழமை 7 பேரை கைது செய்து அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து அந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் 4 பேரை நேற்று கைது செய்ததையடுத்து இதுவரை 11 கைது செய்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...