‘போதிய உரங்கள் இல்லாவிடின் ரூ.3,400க்கு அரிசியை இறக்குமதி செய்து விற்க வேண்டும்: அகில

Date:

நாட்டில் 10,000 உரங்கள் வழங்காவிட்டால் அரிசியை வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து ரூ.3,400க்கு விற்க வேண்டியிருக்கும் என உரம் மற்றும் பெருந்தோட்டத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

கடன் திட்டத்தின் கீழ் 65,000 மெட்ரிக் தொன் யூரியாவை இலங்கைக்கு வழங்க இந்தியா இணங்கியுள்ளது.

அதில் 40,000 மெட்ரிக் தொன் நெல் சாகுபடிக்கும் 20,000 மெட்ரிக் தொன் மற்ற பயிர்களுக்கும் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக நெல், மரக்கறிகள், பெரிய வெங்காயம் மற்றும் ஏனைய பயிர் விதைகளுக்கான தேவை போதுமானதாக இல்லை என கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது.

விவசாயத் துறையில் விதைத் தட்டுப்பாடு ஒரு முக்கியப் பிரச்சினையாக இருப்பதால், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று விவசாய அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...