இன்று மதியம் 12.00 மணிக்கு மேல் பஸ் கட்டணம் உயரும்: சாதாரண தர மாணவர்களுக்கு விசேட சேவை!

Date:

இன்று நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் பஸ் கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய விலை அதிகரிப்பு, தற்போது ரூ.5 ஆக இருக்கும் குறைந்தபட்ச பஸ் கட்டணத்தையும் பாதிக்கும் என பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

டீசல் விலையும் ரூ.111 உயர்த்தப்பட்டதால் அது நேரடியாக பஸ் சேவையை பாதிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களின் வசதிக்காக நண்பகல் 12.00 மணி வரை பொது போக்குவரத்தில் ஈடுபடுமாறு பஸ் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது பஸ் சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளின் விலைகளை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்மைக்காலமாக அரசாங்கத்திடம் சம்பந்தப்பட்ட தரப்பினர் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...