ஆறு வாரங்களில் நிதி அமைச்சரின் இடைக்கால வரவு-செலவுத் திட்டம்!

Date:

தமது அரசாங்கம் ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இடைக்கால வரவு- செலவுத் திட்டம் நிவாரண வரவு செலவுத் திட்டமாக முன்வைக்கப்படும் எனவும், உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் பணம் இரண்டு வருட நிவாரணத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

தோல்வியடைந்த பொருளாதார முகாமைத்துவத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்த்து நாட்டை வழமைக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கலாம் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

22 மில்லியன் இலங்கை சனத்தொகையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நிதி வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...