சப்புகஸ்கந்த பணிகள் இன்று முதல் மீள ஆரம்பம்!

Date:

இரண்டு மாதங்களுக்கு பின்னர், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய பணிகளை இன்று முதல் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மசகு எண்ணெய் பற்றாக்குறை காரணமாக, சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள், கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், நாட்டை வந்தடைந்துள்ள எரிபொருள் கப்பலில் இருந்து இன்றைய தினம் எரிபொருளை தரையிறக்கும் பணிகள் இடம்பெறவுள்ளன.

இதையடுத்து, சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய பணிகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

39,968 மெட்ரிக் தொன் 92 ஒக்டேன் பெற்றோல் தற்போது கையிருப்பில் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் 7,112 மெட்ரிக் தொன் 95 ஒக்டேன் பெற்றோலும், 23,022 மெட்ரிக் தொன் டீசலும் , சூப்பர் டீசல் 2,588 மெட்ரிக் தொன்னும் மற்றும் விமான எரிபொருள் 3,578 மெட்ரிக் தொன்னும் கையிருப்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...