ஆயிஷாவின் குடும்பத்திற்கு விரைவில் நீதி வழங்க ஜனாதிபதி உறுதி!

Date:

‘ஈவிறக்கமின்றி முறையில் கொல்லப்பட்ட சிறுமி ஆயிஷாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த கொடூரமான குற்றத்திற்காக அவரது குடும்பத்திற்கு விரைவான நடவடிக்கை மற்றும் நீதியை விரைவுபடுத்துவதற்கு நான் உறுதியளிக்கிறேன், என்று ஜனாதிபதி தனது ட்வீட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விரைவான நடவடிக்கை மற்றும் நீதியை துரிதப்படுத்துவதாக உறுதியளித்தார்.

அட்டுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா மே 27ஆம் திகதி காணாமல் போயிருந்தார். இன்று மே 28ஆம் திகதி வயல் வெளிகள் அமைந்துள்ள ஓடைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய உதவும் பிரேத பரிசோதனை நாளை, மே 29 ஆம் தேதி நடைபெறும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

சவூதியில் ரமழான் பிறை தென்பட்டது: நாளை முதல் புனித நோன்பு ஆரம்பம்

சவூதி அரேபியாவில் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம்...

பங்களாதேஷ் புதிய பிரதமராகப் பதவியேற்றார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் நாட்டின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றுக் கொண்டார். பங்களாதேஷில் நடைபெற்ற...

“வக்பு சட்டமும் பள்ளிவாசல்கள் மற்றும் வக்புகள் (அவ்காப்) என்பனவற்றின் முகாமைத்துவமும்”  நூல் வெளியீட்டு நிகழ்வு

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், தற்போதைய இலங்கை வக்பு நியாய சபையின்...

கிராமங்களுக்கு 4G வசதியை விரிவுபடுத்த திட்டம்: அமைச்சரவை அனுமதி

தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத பிரதேசங்கள் மற்றும் குறைந்த தொடர்பாடல் வசதிகளுடன் கூடிய...