தற்கொலை செய்த இராணுவவீரர் எனது பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவரில்லை: மறுக்கின்றார் சுமந்திரன் MP!

Date:

வெள்ளவத்தையில் இன்று தன்னைதானே சுட்டுதற்கொலை செய்துகொண்டுள்ள இராணுவவீரர் சம்பவம் இடம்பெற்றவேளை தனது பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றவில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மே 9ம் திகதி சம்பவங்களிற்கு பின்னர் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் இராணுவபாதுகாப்பு வழங்கப்பட்டது என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நான் இந்த விவகாரத்திற்கு பொறுப்பான அதிகாரி லெப். கேர்ணல் குணதிலகவை தொடர்புகொண்டு எனக்கு பாதுகாப்பு தேவையில்லை என தெரிவித்தேன் அதனை தொடர்ந்து அவர்கள் நீக்கப்பட்டனர் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் இந்த பிரிவினர் எனதுவீட்டிற்கு அருகிலிருந்து வெளியேறி தொலைவில் நிலை கொண்டுள்ளதை பார்த்தேன் எனதெரிவித்துள்ள சுமந்திரன் வீதிகளில் வழமையாக இராணுவத்தினர் காணப்படுவதால் இவர்களை எனது பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்கள் என நான் கருதவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இன்று காலை இந்த பிரிவை சேர்ந்த ஒரு இராணுவவீரர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்ற துரதிஸ்டவசமான செய்தியை கேள்விப்பட்டேன் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...