நபிகளாரின் வரலாற்றை எழுதிய மலேசியாவைச் சேர்ந்த அஸ்மா ஹாஜி அவர்கள் இறைவனிடம் மீண்டார்!

Date:

நபிகளாரின் வரலாற்றை எழுதிய மங்கை, சகோதரி அஸ்மா ஹாஜி அப்துல் லதீஃப் இறைவனிடம் மீண்டார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன். அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து அருள்புரிவானாக! அவருடைய நல்லறங்களை ஏற்றுக் கொள்வானாக! அவருக்கு சுவனத்தின் உயர்ந்த மாளிகைகளில் சேர்த்துக் கொள்வானாக! ஆமீன்.

மலேசியாவைச் சேர்ந்த அஸ்மா ஹாஜி அவர்கள் மலாய் மொழியில் நபிகளாரின் அழகிய வரலாற்றை எழுதி நற்பேறு பெற்றார். ஆசிரியை, எழுத்தாளர், அழைப்பாளர், பன்னூலாசிரியர் என்று வெவ்வேறு தளங்களில் முத்திரை பதித்தவர்.

Nazam Sirah Anbiya என்கிற பெயரில் மலாய் மொழியில் அவர் எழுதிய நூல் 2015-இல் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நபிகளாரின் வரலாற்றின் ஊடே நபிகளாரின் ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களை உள்ளங்கவர் வகையில் சுவையாக விவரித்திருந்தார் அவர்.

குறிப்பு : நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதிலும் நபிகளாரின் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களைக் குறித்து நூல்களை எழுதுவதிலும் ஆண்களைப் போல பெண்களும் பேரார்வமும் பற்றும் உவகையும் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த வகையில் 1980 முதல் 2008 வரை உர்தூ மொழியில் வெளியான ஸீரத் நூல்களின் பெயர்களையும் விவரங்களையும் தொகுத்து ‘ஜதீத் உர்தூ கிதாபியாத்தே ஸீரத்’ என்கிற பெயரில் தனி நூலாகவே வெளியிட்டிருக்கின்றார், ஹாஃபிஸ் முஹம்மத் ஆரிஃப் காதிஜி அவர்கள். இதில் 80 பெண்களின் பெயர்களையும் பதிவு செய்திருக்கின்றார் அவர். முப்பது ஆண்டுகளைக் கொண்ட காலகட்டத்தில் மட்டும் உர்தூ மொழியில் எண்பது பெண் எழுத்தாளர்கள் நபிகளாரின் வரலாற்றைக் குறித்து எழுதியிருக்கின்றார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

உலகின் மற்ற மொழிகளில், மற்ற காலகட்டங்களில் (1980-க்கு முன்பும், 2008-க்கு பின்பும்) எத்தனை நூல்கள் எழுதப்பட்டிருக்கும், எத்தனை பெண்கள் எழுதியிருப்பார்கள் என்பதை நீங்களே கணித்துக் கொள்ளுங்கள்.

அது சரி, தமிழில் நபிகளாரின் வரலாற்றை எத்தனை பெண்கள் எழுதியிருக்கின்றார்கள் எனக் கேட்கின்றீர்களா? எனக்குள்ளும் அந்தக் கேள்வி எழுந்தது.

எத்தனை பெண்கள் எழுதியிருக்கின்றார்கள் என்கிற விவரம் எனக்குத் தெரியவில்லை. ஒரே ஒரு நூல் கூட ஞாபகத்துக்கு வரவில்லை.

அதே சமயம் இன்று ஏராளமான நூல்களையும் நாவல்களையும் கதைகளையும் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கின்ற எழுத்தாளர்களாக தமக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்களாய், எழுத்தாற்றல் பெற்ற ஆளுமைகளாய் ஜொலித்துக் கொண்டிருக்கின்ற சகோதரிகள் எஸ் பர்வீன் பானு (Parveensheik), ஹமீதா ஹாமித் (Hameeda Hamid), ஜரீனா ஜமால் (Jarina Jamal), நாஸ்ரத் ரோசி (Nasrath Rosy) போன்றோர் அன்பு நபிகளாரின் அழகிய வரலாற்றை எழுதுவதன் பக்கம் தங்களின் கவனத்தைச் செலுத்துவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எனக்கு உண்டு. இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
அஷீஸ் லுத்ஃபுல்லாஹ்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...