2021- 2022ஆம் ஆண்டு தேசிய உயிர்காக்கும் போட்டிகளில் விமானப்படையினர் வெற்றி!

Date:

2021- 2022ஆம் ஆண்டு 70 தேசிய உயிர்காக்கும் போட்டிகளில் இலங்கை விமானப்படையின் ஆண் மற்றும் பெண்கள் அணியினர் வெற்றி பெற்றனர்.

இந்தப் போட்டிகள் கடந்த 2022 ஜூன் 03ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர நீச்சல் தடாக வளாகம் கல்கிஸ்ஸ உயிர்காக்கும் தலைமையகம் ஆகியவற்றில் இடம்பெற்றன.

இந்த போட்டிகளில் இலங்கை விமானப்படை சார்பாக பங்கு பற்றிய வீர வீராங்கனைகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி இந்தப் போட்டித் தொடரில் வெற்றி வகை சூடினார்.

அதற்கமைய ஆண்கள் பிரிவில் 01 தங்கம், 06 வெள்ளி மற்றும் 05 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று போட்டியின் வெற்றி அணியாக தெரிவு செய்யப்பட்டது.

மொத்தமாக ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவினர் 08 தங்கம் மற்றும் 08 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றனர்.

விமானப்படை ஆண்கள் ‘பீ’ அணியினர் ஒட்டுமொத்த போட்டிகளில் 2ஆம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.

Popular

More like this
Related

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...