புத்திசாலித்தனமான இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்: சஜித்

Date:

மக்கள் வாழ்வதற்கான உரிமையை இழந்துள்ளதாகவும், அவர்களில் பெருமளவானோர் நாட்டை விட்டு வெளியேறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று (6) கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, நாட்டின் புத்திசாலித்தனமான இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும், இலங்கை மூளையில்லாத மக்கள் அவலத்தை நாடு சந்தித்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

மேலும், தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் பாதை வரைப்படம் என்பன உரிய நேரத்தில் அமுல்படுத்தப்படாவிட்டால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அதற்கு புதிய ஆணையுடன் நிலையான அரசாங்கம் தேவை எனவும் அவ்வாறு செய்யாமல் மக்களை ஏமாற்றி நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் எதிர்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...