புத்திசாலித்தனமான இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்: சஜித்

Date:

மக்கள் வாழ்வதற்கான உரிமையை இழந்துள்ளதாகவும், அவர்களில் பெருமளவானோர் நாட்டை விட்டு வெளியேறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று (6) கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, நாட்டின் புத்திசாலித்தனமான இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும், இலங்கை மூளையில்லாத மக்கள் அவலத்தை நாடு சந்தித்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

மேலும், தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் பாதை வரைப்படம் என்பன உரிய நேரத்தில் அமுல்படுத்தப்படாவிட்டால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அதற்கு புதிய ஆணையுடன் நிலையான அரசாங்கம் தேவை எனவும் அவ்வாறு செய்யாமல் மக்களை ஏமாற்றி நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் எதிர்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...