அமைச்சர் நிமல் சிறிபாலவை பதவியில் இருந்து நீக்க இடைக்கால தடை உத்தரவு!

Date:

சுதந்திரக் கட்சியின் பதவியில் இருந்து நிமல் சிறிபால டி சில்வாவை நீக்கியதை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமைச்சர் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்தபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதவியில் இருந்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நீக்குவதற்கு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவை கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்தார்.

இதனை எதிர்த்து இன்று முற்பகல் நிமல் சிறிபால டி சில்வா கொழும்பு மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணி ஊடாக இந்த தீர்மானத்திற்கு தடை கோரி மனுவொன்றை தாக்கல் செய்தார்.

சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு தலைவருக்கோ,  பொதுச் செயலாளருக்கோ, மத்திய குழுவுக்கோ அதிகாரம் இல்லை என நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...