அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை தாக்குதல்!

Date:

பத்தரமுல்ல பெலவத்தையில் கல்வி அமைச்சுக்கு எதிரே அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் நிலவும் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது மாணவர்கள் பொலிஸாரின் தடைகளையும் மீறி கல்வி அமைச்சுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர்.

இவ்வேளையில் அங்கிருந்த கலகம் அடக்கும் பொலிஸார் மாணவர்கள் நோக்கி கண்ணீர்ப் புகைத் தாக்குதலை நடத்தி அவர்களை விரட்டியடித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை உருவாகியுள்ளது.

பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...