மாத்தளையில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் உதவிகள் வழங்கப்பட்டன!

Date:

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையுடன் கணினிகள், விளையாட்டுப் பொருட்கள், உலர் உணவுகள், தையல் இயந்திரங்கள் மற்றும் பிக்குகளுக்கு வசிக்கும் வீடொன்றையும் நன்கொடையாக வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வு மாத்தளை கொங்கலஹமுல்ல கிபலராம விகாரையில் நேற்று (09) இடம்பெற்றது.

பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர்  மேஜர் ஜெனரல் உமர் ஃபரூக் புர்கி, மற்றும் பாகிஸ்தான் தூதரக அதிகாரி அப்சல் மரிக்கார் ஆகியோர் கலந்துகொண்டு இதனை வழங்கி வைத்தனர்.

இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்ப நிலையம் அமைப்பதற்கான கணனிகள், பெண்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம் அமைப்பதற்கான தையல் இயந்திரம்,வழங்கப்பட்டது

கௌடுபெல்ல மகா வித்தியாலய மாணவர்களுக்கான கணனி, உதைபந்தாட்ட, கிரிக்கெட் உபகரணங்கள் என்பன பாடசாலை அதிபரிடம் வழங்கி வைக்கப்பட்டன.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...