‘அனுபவம் வாய்ந்த, வேலை செய்யத் தெரிந்த ஒருவரை நியமிக்கவும்’:லிட்ரோ நிறுவனம்

Date:

லிட்ரோ நிறுவனத்தின் தற்போதைய வீழ்ச்சிக்கு இந்த ஆண்டு வெளியேறிய மூன்று தலைவர்களுமே பொறுப்பு என லிட்ரோ நிறுவனத்தின் நிகழ்ச்சி மற்றும் விளம்பர முகாமையாளர் பியல் கொலம்பஹெட்டிகே தெரிவித்தார்.

அதேநேரம், புதிய தலைவராக எரிவாயு வர்த்தகம் தொடர்பான அறிவுள்ள ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை கேட்டுக் கொள்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த வருட ஆரம்பத்தில் பதவி விலகிய அனில் கொஸ்வத்த, தாம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாகவும், எரிவாயு கப்பலுக்கு பணம் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் திஷார ஜயசிங்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோரின் குறுகிய கால ஆட்சியே தற்போதைய வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

அதிகாரிகள் இப்போது இடமாற்றத் தலைவர்களை நியமிப்பதை நிறுத்திவிட்டு, தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்கக்கூடிய பாரிய அனுபவம் வாய்ந்த தலைவரை நியமிக்க வேண்டும் என்று கூறிய கொலம்பெட்டிகே, இலாபம் ஈட்டும் நிறுவனமாக இருந்த லிட்ரோ தற்போது ரூ.10 மில்லியன் கடன் வழங்கும் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது என்றார்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...