கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் திருவிழா இன்று!

Date:

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 188ஆவது வருடாந்தத் திருவிழா இன்று இடம்பெறவுள்ளது.

அதன்படி, இன்று அதிகாலை 4 மணிமுதல் மும்மொழிகளிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு வருகின்றன.

அத்தோடு, இன்று மாலை 5 மணிக்கு புனித அந்தோனியாரின் திருச்சுரூப பவனியுடன் இன்றைய தினம் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் நேரம் தொடர்பான விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய அதிகாலை 4.00 மணிக்கு தமிழ் மொழி, 5.00 மணிக்கு சிங்கள மொழி, 6.00 மணிக்கு தமிழ் மொழி, 7.00 மணிக்கு சிங்கள மொழி, 8.00 மணிக்கு தமிழ் மொழி, 10.00 மணிக்கு சிங்கள மொழி, நண்பகல் 12.00 மணிக்கு ஆங்கில மொழி இடம்பெறும்.

மேலும், மாலை 5.00 மணிக்கு புனிதரின் திருச்சுரூப பவனி இடம்பெற்று இரவு 8.00 மணியளவில் புனித அந்தோனியாரின் திருச்சுரூப ஆசீர்வாதம் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...