ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வு ஆரம்பமாகிறது!

Date:

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இன்று (13) தொடக்கம் ஜூலை 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது கூட்டத் தொடருக்கான இலங்கைப் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வில் இலங்கை நேரப்படி மாலை 4.20 மணியளவில் அவர் உரையாற்ற உள்ளார்.

மனித உரிமைகள் பேரவையுடனான இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாட்டிற்கு அமைவாக அமைச்சர் பீரிஸின் உரை அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சின்ஜியாங், சீனா, உக்ரைன் மற்றும் பிற நாடுகளில் விடயங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

இதேவேளை மனித உரிமைகளுக்கான ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் வருடாந்த அறிக்கையுடன் அமர்வு ஆரம்பமாகும்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...