லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்!

Date:

வீட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், லிட்ரோ எரிவாயு விலையை உயர்த்தவில்லை என நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முதித பீரிஸ் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

அடுத்த நான்கு மாதங்களுக்கு ஓமானில் உள்ள நீண்ட கால விநியோகஸ்தரிடம் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேநேரம், முதலில் தாய்லாந்தில் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்த முதித பீரிஸ், விநியோகஸ்தர் 6000 மெட்ரிக் தொன் எரிவாயுவிற்கு மட்டுமே விலையை குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஓமானில் உள்ள விநியோகஸ்தர் தாய்லாந்தின் விநியோகஸ்தரை விட சற்றே அதிக விலையை மேற்கோள் காட்டியுள்ளார்.

ஆனால் குறைந்தபட்சம் 100,000 மெட்ரிக் தொன் எரிவாயு ஆர்டருக்கு, அவர்கள் 03 முதல் 04 மாதங்களுக்கு எரிவாயுவை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

இலங்கையின் தற்போதைய எரிவாயு தேவையை கருத்தில் கொண்டு ஓமானில் உள்ள விநியோகஸ்தரிடம் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...