புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவைத்தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (15) இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த குழுவின் இறுதி அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் மற்றும் தேர்தல் கட்டமைப்பில் திருத்தங்களை அடையாளம் காணவும் இது தொடர்பில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்காகவும் சில மாதங்களுக்கு முன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.
அதேநேரம், இந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராகவும் தினேஷ் குணவர்தன உள்ளார்.
இந்தக் குழு ஏற்கனவே அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து தகவல்களைக் கேட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.